Popular Posts

Friday, October 15, 2010

காதல்

எனக்கென ஏற்கனவே பிறந்தவன்  நீ    
இருந்தும்
இந்நாள் வரை என்னை ஏங்க வைத்தாய்  
கற்பனையில் இருந்த உன்னை நாளும் தேடி தேடி
கலைத்து போனேன்
கலங்கி வாடிய நேரத்தில் என் வாழ்க்கையின் கலங்கரையாய்        
கண் முன்னே காட்சி தந்தாய்
கண்டேன் கண்டேன் என் கண்ணாளனை  
களிந்தேன் களிந்தேன் மேலும் மேலும்
விண்ணோரும் மண்ணோரும் கண்டிராத   காதலை
உன்னோடு நான் காண ஏங்கினேன்
உணர்ந்தேன் உணர்ந்தேன் நம் காதல் இரண்டற கலந்ததை
நினைவோடு  நினைவாய் நிலைத்ததை 
காதலின் உச்சத்தை காட்டிய என் காதலனே 
நீ பிறந்ததை என் வாழ்வின் பொன் நாளாய் எண்ணி 
நம் காதல் சாம்ராஜ்யத்தின் முதல் விழாவாக 
கொண்டாடி மகிழும் உன் உயிர் காதலி 

காதலா நீ எனக்கு கிடைபய என ஏங்கவில்லை 
காதல் பூத்ததே எனக்கு பூரணமானது 
அதன் வாசம் என்றும் வீசி கொண்டேயிருக்கும் என்றென்றும் 
எந்த பூவின் வாசம் நாளும் நாளும்  மணக்கும் 
நான் என்ற பூ மண்ணில் மடியும் வரை 

காணத்துடித்தேன் 
கவிதைகளையும் ஓவியங்களையும் 
கண்டேன் 
உன் உணர்வுகளையும் உள்ளத்தையும் 
உருவெடுத்தேன் 
கவிஞனாகவும் கலையனாகவும் 
உருவாக்கினேன் என்னை உனக்கு 


விடியலும் அழுத்தமானது விரைவில் உன்னை காண 
காற்றாய் கரைந்தது கண்டவுடன் - உன்னை

கட்டியது கூடு மட்டும் அல்ல - நெஞ்சில்
கலந்தாய் இரண்டற - அணுவில் 


அறிவியலை அறிய 
குவாண்டம் இயற்பியல் 
  குவாண்டம்  மெமரி உருவாக்கியது 
நம் காதலை அறிய 
குவாண்டம்  லவ் உருவாக்குவோம் 

இசையை ரசித்தேன் 
உன்னை பார்க்கும் முன் 
 இசையை சுவாசித்தேன் 
உன்னை பார்த்த பின் 

காதல் என் வாழ்க்கையின்
பரிணாமத்தையே மாற்றியது 


ஒவ்வொரு விடியலும் இனிமை 
         ஒவ்வொரு செயலும் இனிமை 
ஒவ்வொரு பார்வையும் இனிமை 
ஒவ்வொரு அழைப்பும் இனிமை  
ஒவ்வொரு உணர்வும் இனிமை 
ஒவ்வொரு மணித்துளியும் இனிமை 
ஒவ்வொன்றும் நீ என் அருகில் இருந்தால் 

1 comment:

  1. இந்த கவிதைல இருந்து என்ன தெரியுதுன்னா நீங்க கோவைல பி எஸ் சி பிசிக்ஸ் படிச்சிருக்கீங்க.. அண்ணன் லவ்வை காலேஜ்ல ஓப்பன் பண்ணி இருக்கார்.. ஹா ஹா

    ReplyDelete