எனக்கென ஏற்கனவே பிறந்தவன் நீ
இருந்தும்
இந்நாள் வரை என்னை ஏங்க வைத்தாய்
கற்பனையில் இருந்த உன்னை நாளும் தேடி தேடி
கலைத்து போனேன்
கலங்கி வாடிய நேரத்தில் என் வாழ்க்கையின் கலங்கரையாய்
கண் முன்னே காட்சி தந்தாய்
கண்டேன் கண்டேன் என் கண்ணாளனை
களிந்தேன் களிந்தேன் மேலும் மேலும்
விண்ணோரும் மண்ணோரும் கண்டிராத காதலை
உன்னோடு நான் காண ஏங்கினேன்
உணர்ந்தேன் உணர்ந்தேன் நம் காதல் இரண்டற கலந்ததை
நினைவோடு நினைவாய் நிலைத்ததை
காதலின் உச்சத்தை காட்டிய என் காதலனே
நீ பிறந்ததை என் வாழ்வின் பொன் நாளாய் எண்ணி
நம் காதல் சாம்ராஜ்யத்தின் முதல் விழாவாக
கொண்டாடி மகிழும் உன் உயிர் காதலி
காதலா நீ எனக்கு கிடைபய என ஏங்கவில்லை
காதல் பூத்ததே எனக்கு பூரணமானது
அதன் வாசம் என்றும் வீசி கொண்டேயிருக்கும் என்றென் றும்
எந்த பூவின் வாசம் நாளும் நாளும் மணக்கும்
நான் என்ற பூ மண்ணில் மடியும் வரை
காணத்துடித்தேன்
கவிதைகளையும் ஓவியங்களையும்
கண்டேன்
உன் உணர்வுகளையும் உள்ளத்தையும்
உருவெடுத்தேன்
கவிஞனாகவும் கலையனாகவும்
உருவாக்கினேன் என்னை உனக்கு
விடியலும் அழுத்தமானது விரைவில் உன்னை காண
காற்றாய் கரைந்தது கண்டவுடன் - உன்னை
கட்டியது கூடு மட்டும் அல்ல - நெஞ்சில்
கலந்தாய் இரண்டற - அணுவில்
அறிவியலை அறிய
குவாண்டம் இயற்பியல்
குவாண்டம் மெமரி உருவாக்கியது
நம் காதலை அறிய
குவாண்டம் லவ் உருவாக்குவோம்
இசையை ரசித்தேன்
உன்னை பார்க்கும் முன்
இசையை சுவாசித்தேன்
உன்னை பார்த்த பின்
காதல் என் வாழ்க்கையின்
பரிணாமத்தையே மாற்றியது
ஒவ்வொரு விடியலும் இனிமை
ஒவ்வொரு செயலும் இனிமை
ஒவ்வொரு பார்வையும் இனிமை
ஒவ்வொரு அழைப்பும் இனிமை
ஒவ்வொரு உணர்வும் இனிமை
ஒவ்வொரு மணித்துளியும் இனிமை
ஒவ்வொன்றும் நீ என் அருகில் இருந்தால்
இந்த கவிதைல இருந்து என்ன தெரியுதுன்னா நீங்க கோவைல பி எஸ் சி பிசிக்ஸ் படிச்சிருக்கீங்க.. அண்ணன் லவ்வை காலேஜ்ல ஓப்பன் பண்ணி இருக்கார்.. ஹா ஹா
ReplyDelete