Popular Posts

Monday, August 15, 2011

pithatralkal

எனக்கென ஏற்கனவே பிறந்தவன்  நீ    
இருந்தும்
இந்நாள் வரை என்னை ஏங்க வைத்தாய்  
கற்பனையில் இருந்த உன்னை நாளும் தேடி தேடி
கலைத்து போனேன்
கலங்கி வாடிய நேரத்தில் என் வாழ்க்கையின் கலங்கரையாய்        
கண் முன்னே காட்சி தந்தாய்
கண்டேன் கண்டேன் என் கண்ணாளனை  
களிந்தேன் களிந்தேன் மேலும் மேலும்
விண்ணோரும் மண்ணோரும் கண்டிராத   காதலை
உன்னோடு நான் காண ஏங்கினேன்
உணர்ந்தேன் உணர்ந்தேன் நம் காதல் இரண்டற கலந்ததை
நினைவோடு  நினைவாய் நிலைத்ததை 
காதலின் உச்சத்தை காட்டிய என் காதலனே 
நீ பிறந்ததை என் வாழ்வின் பொன் நாளாய் எண்ணி 
நம் காதல் சாம்ராஜ்யத்தின் முதல் விழாவாக 
கொண்டாடி மகிழும் உன் உயிர் காதலி 

காதலா நீ எனக்கு கிடைபய என ஏங்கவில்லை 
காதல் பூத்ததே எனக்கு பூரணமானது 
அதன் வாசம் என்றும் வீசி கொண்டேயிருக்கும் என்றென்றும் 
எந்த பூவின் வாசம் நாளும் நாளும்  மணக்கும் 
நான் என்ற பூ மண்ணில் மடியும் வரை 

காணத்துடித்தேன் 
கவிதைகளையும் ஓவியங்களையும் 
கண்டேன் 
உன் உணர்வுகளையும் உள்ளத்தையும் 
உருவெடுத்தேன் 
கவிஞனாகவும் கலையனாகவும் 
உருவாக்கினேன் என்னை உனக்கு 


விடியலும் அழுத்தமானது விரைவில் உன்னை காண 
காற்றாய் கரைந்தது கண்டவுடன் - உன்னை

கட்டியது கூடு மட்டும் அல்ல - நெஞ்சில்
கலந்தாய் இரண்டற - அணுவில் 


அறிவியலை அறிய 
குவாண்டம் இயற்பியல் 
  குவாண்டம்  மெமரி உருவாக்கியது 
நம் காதலை அறிய 
குவாண்டம்  லவ் உருவாக்குவோம் 

இசையை ரசித்தேன் 
உன்னை பார்க்கும் முன் 
 இசையை சுவாசித்தேன் 
உன்னை பார்த்த பின் 

காதல் என் வாழ்க்கையின்
பரிணாமத்தையே மாற்றியது 


ஒவ்வொரு விடியலும் இனிமை 
         ஒவ்வொரு செயலும் இனிமை 
ஒவ்வொரு பார்வையும் இனிமை 
ஒவ்வொரு அழைப்பும் இனிமை  
ஒவ்வொரு உணர்வும் இனிமை 
ஒவ்வொரு மணித்துளியும் இனிமை 
ஒவ்வொன்றும் நீ என் அருகில் இருந்தால் 

hi koo

நட்சத்திரம் - வானம் என்னும் கூரையில் 
ஓட்ட வாய்த்த தங்க காசுகள் 
மழை -    வானம் என்னும் கூரையில் 
இருந்து  விழும் வெள்ளி கம்பிகள்

Mother earth

பூமி தாயே!

சுமை தாங்கியே.....

எங்களை எப்போதும் உன் கருவறையில் சுமக்கிறாய் 
ஒவ்வொரு பருபொருளிலும் நீக்கமற கலந்துல்லாய் - புவி ஈர்ப்பு விசையால் 
  அனைத்து பரு பொருளையும் ஈர்ப்பு விசையால்
உம்மோடு அரவணைகிறாய்

மனிதன் வாழ
  மனிதனின் ஆசை, பேராசை தீர
என்னென்ன  விந்தை செய்கிறாய் 
என்னென்ன  வரம் அளிக்கிறாய் 

              கணக்கில் அடங்கா வள்ளல் குணம் கடல் போல 

யார் எதை கேட்கிறார்களோ 
    அதை அப்படியே 
தருகிறாய் - எள்ளளவும் குறையாமல் 

காலை முதல் மாலை வரை 
மிக உயர்ந்த - அரிய பொருட்களையே 
 தருகிறாய் - உம் குழந்தைகளுக்கு

உமக்கு எஞ்சி நிற்பதோ - எங்களின்

அழுக்குகளும், எச்சங்கள் மட்டுமே 
கருணையின் உச்சம் தான் எத்தனை!

                          இப்படிக்கு 
                    நீ பெற்ற பிள்ளை 





















   



மனித வாழ்வில் எப்போது பிரச்சனை ஆரம்பம்?

மனித வாழ்வில் எப்போது பிரச்சனை ஆரம்பம்?
காதல் தீரும் போது 
கருணை தீரும் போது
நட்பு தீரும் போது
நிம்மதி தீரும் போது
இளமை தீரும் போது
ஆரோக்கியம் தீரும் போது
பாசம் தீரும் போது
அன்பு தீரும் போது
நம்பிக்கை தீரும் போது  
நேர்மை தீரும் போது
யதார்த்தம் தீரும் போது
பண்பு தீரும் போது
நேசம் தீரும் போது
பொறுமை தீரும் போது
செல்வம் தீரும் போது
பாராட்டு தீரும் போது
செழிப்பு தீரும் போது
சகிப்பு தீரும் போது
வீரம் தீரும் போது
விவேகம் தீரும் போது
இறைமை தீரும் போது